வெற்றி சான்றிதழை கொண்டுச்செல்ல மறந்த தவெக அமைச்சர் கீர்த்தனா! சற்றுமுன்னர் பதவியேற்பு
புதிய இணைப்பு
தமிழ்நாடு 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை ஆரம்பமான நிலையில், தவெக அமைச்சர் கீர்த்தனா சற்றுமுன்னர் எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று (11) கூடியுள்ளது.
புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
சட்டப்பேரவையில் பதவியேற்பு
இந்த நிலையில், தவெக அரசின் அமைச்சர் கீர்த்தனா, எம்.எல்.ஏ. ஆக தேர்வான சான்றிதழை மறந்து எடுத்து வராததால் சட்டப் பேரவையில் உறுப்பினராக பதவியேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், பிற அமைச்சர்களுடன் அவர் உறுப்பினராக பதவியேற்க முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சான்றிதழை கொடுத்த பிறகு பதவியேற்றுக்கொள்வார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அவர் ஒரு நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்து, விஜய்யின் அரசியல் மூலம் இந்த வாய்ப்பைப் பெற்றதாகவும் குறிப்பிடத்தக்கது.