காதர் மஸ்தான் தலைமையில் துணுக்காய் பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம்
முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது துணுக்காய் பிரதேச செயலகத்தில் இன்று (15.02.2024) காலை 10 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.
அபிவிருத்திக்குழுக் கூட்டம்
துணுக்காய் பிரதேச செயலாளர் இராமதாஸ் ரமேஸின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் துணுக்காய் பிரதேசத்தின் முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
அத்துடன் விவசாயம், காணி, வனவளத் திணைக்களம், நன்னீர் மீன்பிடி, கடற்றொழில் மற்றும் கடற்றொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டு சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் வெள்ள பாதிப்புக்கள் மற்றும் பயிர் அழிவுகள் தொடர்பாகவும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் துணுக்காய் பிரதேச சபை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
