ஆழிப்பேரவையால் உயிரிழந்தோருக்காக 2 நிமிடங்கள்
2004ஆம் ஆண்டு இலங்கை உட்பட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்திய ஆழிப்பேரலையால் உயிரிழந்தோர் இன்று நினைவுக்கூரப்படுகின்றனர்.
இந்தநிலையில் உயிரிழந்தோரின் நினைவுக்கூரலுக்காக இன்று முற்பகல் 9.25க்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியை செலுத்துமாறு அனர்த்த முகாமை மத்திய நிலையம், இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பிரதான நினைவஞ்சலி நிகழ்வு ஹிக்கடுவ பெரலிய ரயில் விபத்து இடம்பெற்ற பகுதியில் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதிலும் மத வழிபாட்டு நிகழ்வுகள் மற்றும் நினைவஞ்சலி நிகழ்வுகள் என்பன மேற்கொள்ளப்பட உள்ளன.
2004ஆம் ஆண்டு ஆழிப்பேரலையால் இலங்கையில் 30ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டன. இலட்சக்கணக்கானோர் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்தனர்.
you may like this video....






நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15
நேபாளத்தில் இருந்து இன்னொரு துயரமான செய்தி வெளிவரலாம்... சுரங்கத்தில் சிக்கிய 900 பேர்கள் News Lankasri
புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பர் 7 முதல் அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan