சுனாமி பேபியால் முன்னெடுக்கப்பட்ட ஆழிப்பேரலை நினைவேந்தல்
ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்காக சுனாமி பேபி அபிலாஷ், மட்டக்களப்பில் தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.
அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூவிக்கு முன்பாக இன்று அவர் அஞ்சலி செலுத்தியிருந்தார்.
யார் இந்த ஜெய ராசா அபிலாஷ் ?
கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையின்போது 2004.12.26 அன்று கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பெரிதும் பாதிக்கப்பட்டது.
சுனாமி பேபி 81
இதன்போது வைத்தியசாலையில் இருந்த இரண்டு மாதம் ஒருவாரமும் நிறைந்த குழந்தையாக அபிலாஷ், சுனாமி பேபி 81 எனும் பெயருடன் உலகம் முழுவதும் பேசும் குழந்தையாக மாறினார்.
இந்த குழந்தை தன்னுடையது என 09 தாய்மார்கள் உரிமைக்கோரி இருந்தனர்.
பின்னர் அங்கு ஏற்பட்ட குழப்ப நிலையால் வைத்தியசாலை நிர்வாகம் கல்முனை நீதவான் நீதிமன்றத்தை நாடியிருந்தது.
இந்நிலையில், ஒன்பது தாய்மார்களையும் மரபணு பரிசோதனை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.
பின்னர் விசாரணை முடிவில் ஜெயராசா யுனித்தலா தம்பதியினர்களின் புதல்வனே அபிலாஷ் என நிரூபணமாகியது.
உறவுகளுக்காக அஞ்சலி
பின்னர் அந்த குழந்தை ஜெயராசா யுனித்தலா தம்பதியினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது மட்டக்களப்பு குருக்கள்மடம் கிராமத்தில் வசித்து வரும் அபிலாஷ் அவரது இல்லத்தில் சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவுத் தூபி ஒன்றையும்அமைத்து வழிபாடு செய்து வருகின்றார்.
தற்போது 20 வயதுடை சுனாமி பேபி என அறியப்படும் அபிலாஷ் அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூவிக்கு முன்பாக ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்காக தனது அஞ்சலியை பெற்றோருடன் செலுத்தினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri
