நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 21ஆவது சுனாமி நினைவேந்தல்

Tsunami Sri Lankan Peoples
By Erimalai Dec 26, 2025 11:34 AM GMT
Report

சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26.12.2025) மன்னார் பிரதான பாலத்தடியில் முன்னெடுக்கப்பட்டது.

கலங்கரை கலை இலக்கிய நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் இயக்குனர் ஏ.ரி.மேகன்ராஜ் தலைமையில் குறித்த நினைவேந்தல் இடம்பெற்றது.

சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் காலை 10.25 மணியளவில் குறித்த கடற்கரை பகுதியில் தீபம் ஏற்றி மலர் தூவி உயிர் நீத்தவர்களுக்காக உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் இணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை நினைவேந்தல் நிகழ்வுகள் மன்னார் மாவட்டச் செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.திலீபன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டு தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 21ஆவது சுனாமி நினைவேந்தல் | Tsunami 21St Anniversary Commemoration

நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 21ஆவது சுனாமி நினைவேந்தல் | Tsunami 21St Anniversary Commemoration

நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 21ஆவது சுனாமி நினைவேந்தல் | Tsunami 21St Anniversary Commemoration  

மன்னார் செய்தி - ஆஸிக்

உடுத்துறையில் சுனாமி நினைவேந்தல்

21ஆவது சுனாமி நினைவேந்தல் உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் இன்று(26) காலை 9:30 மணியளவில் பொது நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது. 

இதில் மலர் மாலையினை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலமை கிராம சேவையாளர் தோமஸ் யூட் மலர் மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைக்க அதனை தொடர்ந்து வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் தங்கவேல் தங்கரூபன் உட்பட அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள், ஆகியோர் அணிவித்து வைக்க தொடர்ந்து மலர் அஞ்சலி இடம்பெற்றது.

 அஞ்சலி

தொடர்ந்து தேசிய கொடியினை மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி ஏற்றியதை தொடர்ந்து பொது ஈகைசுடரினை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலைமை கிராமசேவகர் தோமஸ் யூட் ஏற்றிவைக்க சம நேரத்தில் சுனாமியால் காவு கொள்ளப்பட்டவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 21ஆவது சுனாமி நினைவேந்தல் | Tsunami 21St Anniversary Commemoration

இன்றைய நினைவேந்தலில் சுனாமியால் காவுகொள்ளப்பட்டவர்களது உறவுகள், பொது அமைப்பு பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், என பல நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

சுனாமி பேபி

சுனாமி பேபியின் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபியில் அவரது பெற்றோர் அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் அமைந்துள்ள சுனாமி பேபி அபிலாஷின் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபியில் முன்பாக ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்காக அபிலாஷின் பெற்றோர் அஞ்சலியை இன்று வெள்ளிக்கிழமை(26.12.2025) செலுத்தியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 21ஆவது சுனாமி நினைவேந்தல் | Tsunami 21St Anniversary Commemoration

தற்போது 21 வயதுடை சுனாமி பேபி 81 என அறியப்படும் ஜெயராசா அபிலாஷ் தனது உயர் படிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார்.

இந்நிலையில் அவரது இல்லத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத் தூபியில் அவரது பெற்றார் இன்று சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 21ஆவது சுனாமி நினைவேந்தல் | Tsunami 21St Anniversary Commemoration

மேலதிக தகவல்-ருசாத்

 2 நிமிட மௌன அஞ்சலி

இலங்கை அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 'தேசிய பாதுகாப்பு தினத்தை' முன்னிட்டு, சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் விசேட நினைவேந்தல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் இன்று (டிசம்பர் 26) மிகச் சிறப்பாக நடைபெற்றன.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவினால் உயிரிழந்த உறவுகளையும், ஏனைய இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களையும் நினைவுகூர்ந்து இன்றைய நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 21ஆவது சுனாமி நினைவேந்தல் | Tsunami 21St Anniversary Commemoration

இன்றைய நிகழ்வின் சிறப்பம்சங்களாக உயிரிழந்தவர்களுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், தேசிய கீதம் இசைக்கப்பட்டு, விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

அதனை தொடர்ந்து அனர்த்த இடர் குறைப்பு மற்றும் முகாமைத்துவம் குறித்த விழிப்புணர்வு அமர்வு நடைபெற்றது.

குறிப்பாக 2004 சுனாமி மற்றும் அண்மைய 'டிட்வா' (Ditwah) சூறாவளி பாதிப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இயற்கை அனர்த்தங்களில் இருந்து எமது சமூகத்தைப் பாதுகாக்கவும், அதற்கான தயார்நிலையை உறுதிப்படுத்தவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

ஹட்டனில் நினைவு தினம் அனுஷ்டிப்பு

இலங்கையில் சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் பூர்த்தியினை எட்டியுள்ளன. அதனால் ஏற்பட்ட உயிர்சேதங்களும் உடமைகள் சேதங்கள் இன்னும் எம்மை விட்டு நீங்காத வடுக்களாகவே உள்ளன.

இதனை முன்னிட்டு நாடாளவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் சுனாமி ஆழிப்பேரலையால் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து ஹட்டன் மணிகூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் உள்ள புத்தர் நிலை முன்னால் 2025.12.26 ம் திகதி விளக்கேற்றி ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வரும் வாகனங்கள் 9.25 தொடக்கம் 9.27 வரை நிறுத்தப்பட்டு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் ஹட்டன் பொலிஸார், ஹட்டன் நகரசபையின் செயலாளர், உத்தியோகஸ்தர்கள் உட்பட பொது மக்கள் இணைந்து அஞ்சலி செலுத்தப்பட்டன.

மேலதிக தகவல்- மலைவாஞ்சன்

ஆழிப்பேரலை

சுனாமி அனர்த்தம் இடம் பெற்று இன்றுடன் (26) 21 ஆவது வருட நினைவு தினத்தை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெயகௌரி ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இடம் பெற்றது.

ஆழிப்பேரலையின் போது உயிர் நீத்த உறவுகளுக்காக இரு நிமிட மௌன அஞ்சலியுடன் இறை வணக்கமும் இடம் பெற்றது.

நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 21ஆவது சுனாமி நினைவேந்தல் | Tsunami 21St Anniversary Commemoration

இதன் போது சுனாமி தொடர்பிலான நினைவு பேருரையும் இடம் பெற்றதுடன் திட்வா புயல் அனர்த்தம் தொடர்பிலான நினைவுகளும் பேருரைகளான பிரதேச செயலாளர் உரையாற்றினார்.

இதில் உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் உட்பட பதவி நிலை உத்தியோகத்தர்கள்,சக உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

மேலதிக தகவல்-ரொசான்

மட்டக்களப்பு 

ஆழிப்பேரலை சுனாமி தாக்கம் ஏற்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இதனை நினைவு கூர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிலையில் ஓந்தாச்சிமடம் கிராமத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவுத் தூபியில் உயிரிழந்தவர்களுக்கு சுடர் ஏற்றி, மலர்தூபி உறவினர்கள் அஞ்சலி தெலுத்தியுள்ளனர்.

இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உருத்திரன் உதயஸ்ரீதர், பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், ஏனைய கிராம மட்ட பொது அமைப்புக்கள், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 21ஆவது சுனாமி நினைவேந்தல் | Tsunami 21St Anniversary Commemoration

நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 21ஆவது சுனாமி நினைவேந்தல் | Tsunami 21St Anniversary Commemoration

நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 21ஆவது சுனாமி நினைவேந்தல் | Tsunami 21St Anniversary Commemoration

 செய்தி - ருசாத்

கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

9.00 மணி 15 நிமிடத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து 9.00 மணி 25 நிமிடத்தில் அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த அஞ்சலி நிகழ்வில் சர்வமதத்தலைவர்கள் ,கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப்பொலிஸ்மா அதிபர், கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மாவட்ட செயலாளர் உள்ளிட்ட மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் ,உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 21ஆவது சுனாமி நினைவேந்தல் | Tsunami 21St Anniversary Commemoration

நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 21ஆவது சுனாமி நினைவேந்தல் | Tsunami 21St Anniversary Commemoration

நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 21ஆவது சுனாமி நினைவேந்தல் | Tsunami 21St Anniversary Commemoration

 செய்தி - தேவந்தன்

முல்லைத்தீவு 

கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் 26.12.2025 இன்று உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

அந்தவகையில் உயிரிழந்தவர்களின் உறவுகள் கதறி அழுது கண்ணீர் மல்க, தமது உயிரிழந்த உறவுகளுக்கு மலர் தூவி, தீபமேற்றி, உணவுப்பொருட்களைப் படையலிட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலிகளை மேற்கொண்டனர்.

அதேவேளை உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி மத வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தன. மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 21ஆவது சுனாமி நினைவேந்தல் | Tsunami 21St Anniversary Commemoration

நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 21ஆவது சுனாமி நினைவேந்தல் | Tsunami 21St Anniversary Commemoration

நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 21ஆவது சுனாமி நினைவேந்தல் | Tsunami 21St Anniversary Commemoration

 செய்தி - சதீஸ்

யாழ்.வடமராட்சி கிழக்கு - உடுத்துறை சுனாமி நினைவேந்தல்

சுனாமி ஆழிப் பேரலையின் 21ம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.வடமராட்சி கிழக்கு - உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மாலையிட்டு தீபங்கள் ஏற்றி உணவுகளை படையலிட்டு உறவுகள் அஞ்சலித்தனர்.

கடந்த 2004 டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை பேரனர்த்தம் காரணமாக பல்லாயிரம் பொதுமக்கள் உயிரிழந்ததுடன் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் அழிந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 21ஆவது சுனாமி நினைவேந்தல் | Tsunami 21St Anniversary Commemoration

நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 21ஆவது சுனாமி நினைவேந்தல் | Tsunami 21St Anniversary Commemoration

நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 21ஆவது சுனாமி நினைவேந்தல் | Tsunami 21St Anniversary Commemoration

செய்தி - தீபன்

விசேட ஞாபகார்த்த தின நிகழ்வு

​சுனாமி அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் (26) 21 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஈடேற்றத்திற்கான விசேட ஞாபகார்த்த தின நிகழ்வும், துஆப் பிரார்த்தனையும் மூதூர் - தக்வாநகர் ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. ​

நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 21ஆவது சுனாமி நினைவேந்தல் | Tsunami 21St Anniversary Commemoration

 இதில் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.

மேலதிக தகவல்- கியாஸ் ஷாபி

 கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

9.00மணி 15நிமிடத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டத்தைத்தொடர்ந்து .9.00மணி 25நிமிடத்தில் அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 21ஆவது சுனாமி நினைவேந்தல் | Tsunami 21St Anniversary Commemoration

மேலதிக தகவல்-தேவந்தன்

மலர் அஞ்சலி

21 வது சுனாமி நினைவேந்தல் கட்டைக்காடு சென்மேரிஸ் கடற்தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் கட்டைக்காடு சென்மேரிஸ் சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை 9:30 மணியளவில் பொது நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது.

நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 21ஆவது சுனாமி நினைவேந்தல் | Tsunami 21St Anniversary Commemoration

இதில் மலர் மாலையினை பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் பி.அலஸ்ரன் அணிவித்ததுடன் அஞ்சலி நிகழ்வை உயிரிழந்தவர்கள் சார்பாக உறவினர் ஒருவர் ஆரம்பித்து வைக்க அதனை தொடர்ந்து மலர் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.

மேலதிக தகவல்- எரிமலை

அஞ்சலி

தேசிய பாதுகாப்ப தினமம், சுனாமி ஆழிப் பேரலையின்21 வது அண்டு நினைவு தினமும் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 21ஆவது சுனாமி நினைவேந்தல் | Tsunami 21St Anniversary Commemoration

இதன்போது 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செய்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

மேலதிக தகவல்-ருசாத்

புதுக்குடியிருப்பில் நினைவஞ்சலி

ஆழிப் பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(26) காலை 8.05 மணியளவில் புதுக்குடியிருப்பில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 21ஆவது சுனாமி நினைவேந்தல் | Tsunami 21St Anniversary Commemoration

புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையுடன் இணைந்து சுனாமியால் உயிர்நீத்த ஆயிரக்கணக்கானவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள புதுக்குடியிருப்பு ஐயனார் கோவிலடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவாலயத்தில் உயிரிழந்தவர்களுக்கு  இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன்,  சுனாமியால் பறிபோன மூன்று பிள்ளைகளின் தாய்மார்களால் பொது சுடர் ஏற்றப்பட்டு,  நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலதிக தகவல்- ஷான்

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் விசேட அனுஷ்டிப்பு

2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமிப் பேரழிவின் 21 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(26) மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை நாடு முழுவதும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டுள்ளதுடன், சுனாமி மற்றும் பிற இயற்கை பேரழிவுகளால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதையும் செலுத்தப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 21ஆவது சுனாமி நினைவேந்தல் | Tsunami 21St Anniversary Commemoration

இந்த நிகழ்வில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலதிக தகவல்- ரொஷான்


மரண அறிவித்தல்

ஆவரங்கால், New York, Rochester, United States

19 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கிளிநொச்சி, கொழும்பு

26 Dec, 2015
நன்றி நவிலல்

கரணவாய் மேற்கு, அச்சுவேலி, Scarborough, Canada

27 Nov, 2025
மரண அறிவித்தல்

ஜெயந்திநகர், பாரதிபுரம், பூநகரி, Wembley, United Kingdom

22 Dec, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Zürich, Switzerland

21 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்.பாஷையூர், Jaffna

24 Dec, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, கொழும்பு 6

24 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, நீர்வேலி வடக்கு

26 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், திருச்சிராப்பள்ளி, India

27 Dec, 2020
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, Ratmalana

07 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, இராசாவின் தோட்டம்

28 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Scarborough, Canada

23 Dec, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

21 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, டென்மார்க், Denmark

26 Dec, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முரசுமோட்டை

26 Dec, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, Toronto, Canada

21 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Meierskappel, Switzerland

25 Dec, 2023
மரண அறிவித்தல்

வாதரவத்தை, விசுவமடு, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

18 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
கண்ணீர் அஞ்சலி

சுன்னாகம், கிளிநொச்சி

22 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US