சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் இனவாதத்தை ஏற்படுத்தி மகிந்தவுக்கு வாய்ப்பை வழங்க முயற்சி! (Video)
இந்த நேரத்தில் 13ஐ வலியுறுத்துவது சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் இனவாதத்தை ஏற்படுத்தி மகிந்தவுக்கு வாய்ப்பை வழங்க முயற்சிப்பதாக வட கொழும்பு இந்து பரிபாலன சங்கத்தின் பொதுச் செயலாளரும் இலங்கை விஸ்ம கர்மா சங்கத்தின் தலைவரும் சுமார் 50 வருடத்திற்கு மேலாக ஆன்மிகப் பணியில் ஈடுபட்டு வருபவருமான எஸ்.செல்வரட்ணம் தெரிவித்துள்ளார்.
மேலும், மகிந்த ராஜபக்சவுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றாரோ என்ற சந்தேகம் உருவாகியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டுக்குத் தேர்தல் தேவையில்லை. அவ்வாறு தேர்தல் வைத்தாலும் அதே அமைச்சர்களே சுற்றிச் சுற்றி வருவார்கள். அப்படி நடந்தாலும் இந்த நாட்டின் தலையெழுத்து மாறாது.
இது தொடர்பிலான மேலதிக விபரங்களைக் கீழ் உள்ள காணொளி மூலம் தெரிந்து கொள்ளலாம்...