இலங்கையை நிலைகுலைய வைக்கவுள்ள அமெரிக்கா - பல தொழிற்சாலைகள் மூடப்படும் ஆபத்து
இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.
அவர் எடுத்த முடிவால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரயல் துறையின் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு சில தொழிற்சாலைகளை மூடுவதற்கும் வழிவகுக்கும் என்று அவர் கூறினார். உலகெங்கிலும் உள்ள 25 நாடுகள் மீது நாளைய தினம் முதல் வரிகளை விதிக்க உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
குறைந்தபட்ச வரி
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 10 சதவீதம் குறைந்தபட்ச வரியை ட்ரம்ப் அறிவித்தார்.
2024 ஆம் ஆண்டில், அமெரிக்கா இலங்கையிலிருந்து 3 பில்லியன் டொலர்களுக்கு மேல் இறக்குமதி செய்தது.
பொருளாதார நிபுணர்கள்
இந்தப் புதிய வரிகள் விதிக்கப்படுவது இலங்கைப் பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாற்றுச் சந்தையை தேடுவதன் மூலம் அமெரிக்காவின் வரி நெருக்கடியை சமாளித்துக் கொள்ள வாய்ப்பாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும், இலங்கையில் இருந்து அதிகளவான ஆடைகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
you may like this

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
