பலஸ்தீனர்களை வெளியேற்ற 60 வருடங்களாகத் தீட்டப்பட்டுவரும் திட்டம்!!
காசாவில் வாழ்ந்துவருகின்ற இரண்டு மில்லியன் பலஸ்தீனர்களை காசாவை விட்டு வெளியேற்றிவிட்டு, காசாவை அமெரிக்கா கையகப்படுத்தப்போவதான செய்தியை ட்ரம் அறிவித்திருந்தார்.
காசாவில் இருந்து பலஸ்தீன மக்களை வெளியேற்றுவது என்கின்ற தனது நிலைப்பாட்டை அடிக்கடி அவர் வெளிப்படுத்திவருவது மாத்திரமல்ல, அந்த மக்களை காசாவில் மறுபடியும் எப்பொழுது மீளக் குடியமர்த்துவது என்கின்ற விடயம் பற்றி அவர் வாயே திறக்கவில்லை.
அவர்களை அவர்களது பாரம்பரிய வாழ்விடங்களில் மீளக் குடியமர்த்துகின்ற எந்தவித சமிஞையுமே அவர் வெளிப்படுத்தவில்லை.
ட்ரம்பின் காசாத் திட்டம் என்பது பலஸ்தீனர்களை நிரந்தரமாக காசாவை விட்டு வெளியேற்றுகின்ற திட்டமா என்கின்ற கோணத்திலான பார்வையைச் செலுத்துகின்றது இந்த ‘’உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri