உச்சத்தை தொடும் மஸ்க் - ட்ரம்ப் முறுகல்..!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையிலான பதற்றங்கள் உச்சத்தை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜெர்மன் சான்சலருடன் நடந்த சந்திப்பில், மஸ்க், கையெழுத்து சட்டத்தை விமர்சித்திருந்தமை குறித்து தான் ஆச்சரியம் மற்றும் ஏமாற்றம் அடைந்ததாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், 'ட்ரூத்' எனப்படும் ட்ரம்பின் சமூக வலைத்தளத்தில், மஸ்க் மனநிலை சரி இல்லாதவராக மாறி வருவதாக அவர் பதிவிட்டுள்ளார்.
'Doge' அமைப்பு மூலம் அதிகப்படியான செலவினங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருந்த எலோன் மஸ்க், கடந்த மாதம் தனது அரச பதவியில் இருந்து விலகினார்.
மந்த நிலை
இதனையடுத்து, ட்ரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையிலான மோதல் தீவிரத்தன்மையை அடைந்துள்ளது.
இருவரும் ஒருவரை ஒருவர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
உதாரணமாக, ட்ரம்பின் வரிக்கொள்கை இரண்டாம் பாதியில் மந்த நிலையை ஏற்படுத்தும் என மஸ்க் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
The Trump tariffs will cause a recession in the second half of this year https://t.co/rbBC11iynE
— Elon Musk (@elonmusk) June 5, 2025
இதேவேளை, ட்ரம்பின் பிரசாரங்களுக்காக மஸ்க் 290 மில்லியன் டொலர்களை செலவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
