கமலா ஹரிஸின் நேர்காணலை வெளியிட்ட ஊடகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த ட்ரம்ப்
அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸின்(Kamala Harris) நேர்காணலை திரித்து வெளியிட்டதாக பிரபல செய்தி நிறுவனத்திற்கு எதிராக டொனால்ட் ட்ரம்ப் வழக்கு தொடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் கமலா ஹரிசும், குடியரசு கட்சியின் சார்பில் டிரம்ப்பும் போட்டியிட்டனர்.
இந்நிலையில், தேர்தலுக்கு முன்பு கமலா ஹரிஸ் கொடுத்த நேர்காணலை மட்டுமே சி.பி.எஸ், எனும் செய்தி நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ளது.
ட்ரம்ப் எதிர்ப்பு
இதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், உண்மையை திரித்து கூறும் வகையில் காணொளியை எடிட் செய்து வெளியிட்டுள்ளதால், சி.பி.எஸ்யின் தாய் நிறுவனமான பெராமவுன்ட் குளோபலுக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கேட்டு ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனிடம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த செயலில் ஈடுபட்ட சி.பி.எஸ், செய்தி நிறுவனத்தை முடக்க வேண்டும் அல்லது சுமார் 60 நிமிடங்கள் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri