நுவரெலியாவில் நடுவீதியில் லொறி கவிழ்ந்து விபத்து
நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் கொட்டக்கலை பகுதியில் வைத்து லொறியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது இன்று(16.02.2024) இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியாவில் தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலையால் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலதிக விசாரணைகள்
இதன்போது லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதோடு, அவர்கள் சிறு காயங்களுடன் பாதுகாப்பாக உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி- நானுஓயா நிருபர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |