குச்சவெளி - பெரியமலையில் கற்கள் உடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் (Photos)
திருக்கோணமலை - குச்சவெளி பெரியமலையில் கற்களை உடைத்து அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (07.08.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெரியமலையானது தனியார் ஒருவருக்கு வழங்கப்பட்டு, அங்கு கற்கள் அகற்றுவதற்கான பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், அங்கு கற்கள் உடைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு அரச அதிகாரிகள் பராமுகமாக இருப்பதாகவும் குறிப்பிட்டு, குச்சவெளி பிரதேச செயலக வாயிலை மறித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களின் கோரிக்கை
சம்பவ இடத்திற்கு வருகை தந்த குச்சவெளி உதவி பிரதேச செயலாளர், மக்களின் கோரிக்கையைக் கேட்டறிந்துள்ளார்.
மேலும், இரண்டு வாரகால அவகாசம் தருமாறும் அந்த காலபகுதிக்குள் இந்த விடயம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு தீர்க்கமான முடிவு பெற்றுத்தர முடியும் எனவும் உறுதியளித்திருந்த நிலையில், தற்காலிகமாக ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த மலையானது முன்பு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டிருந்தாகவும் பொது மக்கள் எதிர்ப்பு காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிக்னறது.









அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
