திருகோணமலையில் புதையல் தோண்டிய சந்தேக நபர்கள் கைது
திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இடிமண் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபர்கள் நேற்றையதினம் (01.10.2023) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
கிண்ணியா இடிமண் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றைய தினம் இரவு புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது 6 பேர் கிண்ணியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சொகுசு வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் கிண்ணியா, இறக்கக்கண்டி மற்றும் கம்பஹா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கடந்த தேர்தலில் பிரதான அரசியல் கட்சி ஒன்றில் வேட்பாளராக களமிறங்கிய பெண் ஒருவரின் வீட்டில் புதையல் தோண்டுவதற்கான பூசை நிகழ்வுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் இன்றையதினம் (02.10.2023) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
