திருகோணமலை வெந்நீர் ஊற்றுக் கிணற்றைத் தனதாக்கிக் கொண்ட தொல்பொருள் திணைக்களம் (Video)
வெந்நீர் ஊற்றுக் கிணறு அமைந்துள்ள பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் உரிய முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டி, அந்த பொறுப்புக்களைத் தொல்பொருள் திணைக்களம் நீதிமன்றத்தின் ஊடாக தனதாக்கியுள்ளமை பேசுபொருளாகியுள்ளது.
குறித்த காணியைப் பேணிப் பராமரிக்கும் பொறுப்பு மாரியம்மன் தர்ம நிறுவனத்திற்கு நீதிமன்றம் வழங்கியிருந்த போதிலும் அதனை உரிய முறையில் அவர்கள் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கன்னியா வெந்நீர் ஊற்றுச் சிவன் ஆலய அறங்காவலர் சபை செயலாளர் க.துஷ்யந்தன் கூறியதாவது,