திருகோணமலை ஆர்பாட்டத்தில் திருப்பி அனுப்பப்பட்ட சம்பந்தனின் இணைப்புச் செயலாளர்
திருகோணமலை பொது வைத்தியசாலையில் நிலவும் சிற்றூழியர் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு கோரி நடத்தப்பட்ட ஆர்பாட்டத்திற்கு வருகைதந்த இரா. சம்பந்தனின் இணைப்புச் செயலாளர் ஆர்பாட்டக்காரர்களால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம்(28.06.2023) திருகோணமலை பொது வைத்தியசாலையின் சிற்றூழியர்களால், திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றிய சிற்றூழியர்கள் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றும் சிலர் ஓய்வூதியம் பெற்று சென்றுள்ளதாகவும் தற்போது கடமையில் உள்ள சிற்றூழியர்களுக்கு விடுமுறை, இடமாற்றம் பெற்றுச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிற்றூழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இணைப்புச் செயலாளருக்கு எதிர்ப்பு
இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டக் களத்திற்கு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் இரா. சம்பந்தனின் இணைப்புச் செயலாளரும், திருகோணமலை நகர சபை
முன்னாள் தலைவருமான இராசநாயகம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிற்றூழியர்களுடன்
கலந்துரையாடுவதற்கு வருகை தந்த போது ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது வர வேண்டாம்
என தமது எதிர்ப்பினையும் வெளியிட்டிருந்தனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் தற்போது 135 சிற்றூழியர்களின் பற்றாக்குறை காணப்படுவதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் சுகாதார அமைச்சுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்த போதிலும் இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லை எனவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
எனினும் மிக விரைவாக சிற்றூழியர்கள் நியமிக்க படாவிட்டால் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலையானது கிழக்கு மாகாண சபையின் கீழ் இயங்கி வந்த நிலையில் 2008ம் ஆண்டு மத்திய அரசாங்கத்திற்கு உள்வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்களிடம் சகவாசம் வச்சிக்காதீங்க- நீங்க பிறந்த தேதி என்ன? Manithan
