திருகோணமலை மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம்
திருகோணமலை மாவட்ட செயலகத்தின் இந்த ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டம், இன்று (21.08.2024) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.
கூட்டத்தில் கலந்துகொண்டோர்
இதன்போது, மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், சிரேஷ்ட உதவி கணக்காய்வாளர் தலைமை அதிபதி டபிள்யூ.சி.வி.குருப்பு (கிழக்கு மாகாணம்), பிரதம கணக்காளர் ப.ஜெயபாஸ்கர், கணக்காளர் ஏ.எல்.பிரசாத் விஜேசிங்க, பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக கணக்காளர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வு கிளை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |