தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாம்
திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த மருத்துவ முகாம், இன்று (21) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதலுக்கிணங்க தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இரத்தப் பரிசோதனை, பற் சிகிச்சை, நீரிழிவு நோய் உள்ளிட்ட பல மருத்துவ சேவைகள் இடம்பெற்றதுடன் இன்றைய தினமே இரத்த பரிசோதனைக்கான அறிக்கைகளும் வழங்கப்பட்டுள்ளது.
வைத்திய ஆலோசனைகள்
தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஆர்.மலர்விழி அறிக்கையின் பிரகாரம் வைத்திய ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம் ஊடாக நடமாடும் பஸ் மூலமான இரத்த பரிசோதனை, பற்சிகிச்சை போன்றனவும் தம்பலகாமம் பிரதேச செயலக வளாகத்தில் வைத்து முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதில் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி, உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், நிர்வாக உத்தியோகத்தர் B.U.B.L உடகெதர, உட்பட சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |