திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுக்கூட்டம்
திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுக்கூட்டம் நேற்று (4) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் நடைபெற்றுள்ளது.
தற்போது நிலவக்கூடிய மொன்சூன் பருவக்காற்று நிலைமை காரணமாக மாவட்டத்தில் அனர்த்தங்கள் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளவேண்டிய முன் ஆயத்த நடவடிக்கைகள் பற்றி இக் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பிரதேச செயலாளர் தலைமையில் அனர்த்த முகாமைத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் பிரதேச செயலக ரீதியாக உத்தியோகத்தர்களும் ஏற்படக்கூடிய அனர்த்தங்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
மக்கள் இது தொடர்பில் கூடிய அவதானத்துடன் செயற்படல் மிக முக்கியமானது. மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி அதிகார சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் காணப்படுகின்ற வடிகான்களை தூய்மைப்படுத்துவது மிக இன்றியமையாததாகக் காணப்படுகின்றது.
சில பிரதேசங்களில் வடிகான்கள் மூடப்பட்டுக் காணப்படுவதன் காரணமாக மழையினால் வெள்ளப்பெருக்கு அதிகமாக ஏற்படக் கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது. எனவே உள்ளூர் அதிகார சபை நிறுவனங்கள் வடிகாண்களை துப்பரவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் ஏனைய நிறுவனங்களும் தங்களுடைய ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று இதன்போது அரசாங்க அதிபர் உரிய அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாவட்டத்தில் இயற்கை அனர்த்தம் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் மக்களைப் பாதுகாப்பதற்கான செயற்பாடுகளை முப்படை மற்றும் பொலிஸ் மற்றும் ஏனைய நிறுவனங்களை இணைத்துக்கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக இதன்போது அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பி.ஆர்.ஜயரத்ன, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் கே.சுகுணதாஸ், பிரதேச செயலாளர்கள், முப்படை, பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஏனைய திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.









சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

Bigg Boss 9: நாளை பிரம்மாண்டமாக ஆரம்பிக்கவுள்ள பிக் பாஸ் சீசன் 9: கசிந்தது போட்டியாளர்கள் விபரம்! Manithan

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri
