திருகோணமலை மாவட்ட மட்ட தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கும் போட்டிகள்
திருகோணமலை(Trincomalee) மாவட்ட செயலகத்தினால் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டலுடன் தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கும் மாவட்ட மட்ட போட்டியானது தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரியில் (ஆரம்ப பிரிவு) நேற்று (11) நடைபெற்றது.
இதன்போது தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ. ஸ்ரீபதி அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய நடுவர்களால் போட்டிகள் நடைபெற்றது. மாவட்டத்திலுள்ள ஒன்பது பிரதேச செயலகங்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நடைபெற்ற போட்டிகள்
பேச்சாற்றல், கதாப்பிரசங்கம், நீதிநூல் மனனம், நாடகம், பரதநாட்டியம், பண்ணிசை, சொல்லாடல் திறன், வில்லிசை போன்ற போட்டிகள் நடைபெற்று மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட இந்து சமயக் கலாசார உத்தியோகத்தர் இலக்குமிதேவி சிறீதரன், துறைசார் உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |