திருகோணமலை பிரதான வீதியில் விபத்து - நால்வர் வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலை, கண்டி பிரதான வீதியில் லொறியொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், நான்கு பேர் பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கந்தளாயிலிருந்து தம்புள்ளைக்கு முச்சக்கர வண்டியில் சென்ற நால்வரே பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
25, 43, 40 மற்றும் 20 வயதுடைய நால்வரே படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
லொறியின் சாரதியைக் கைது செய்துள்ளதோடு, விபத்து தொடர்பான மேலதிக
விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.