திருகோணமலையில் விபத்தில் சிக்கி தம்பதியினர் படுகாயம் (VIDEO)
Trincomalee
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Badurdeen Siyana
திருகோணமலை - ஹொரவ்பொத்தான பிரதான வீதி மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் கணவன் மற்றும் மனைவி காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (05.07.2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து - அனுராதபுரம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது காற்றின் வேகத்தினால் மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் வேகமாக வந்த கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஹொரவ்பொத்தான - கல்பே பகுதியைச் சேர்ந்த 50 மற்றும் 55 வயதுடைய இருவரே காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US