திருகோணமலை - கொழும்பு குளிரூட்டப்பட்ட தொடருந்து சேவை ஆரம்பம்
திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு பகல் நேரத்தில் குளிரூட்டப்பட்ட தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிய தொடருந்து சேவையில், குளிரூட்டப்பட்ட தொடருந்து சேவை இல்லாத குறைபாட்டினை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அண்மையில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
அதற்கமைய, தற்பொழுது திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு பகல் நேரத்தில் குளிரூட்டப்பட்ட தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நேரடி விஜயம்
இதனை, அண்மையில், திருகோணமலை தொடருந்து நிலையத்திற்கு நேரடியாக விஜயம் செய்த இம்ரான் மஹ்ரூப் பார்வையிட்டதுடன் அதில் நிலவும் குறைபாடுகளையும் கேட்டறிந்துள்ளார்.
தொடர்ந்து, இந்த குளிரூட்டப்பட்ட தொடருந்து சேவையினை நிரந்தரமாக்குவதற்கும், அந்த தொடருந்து சேவையில் சிற்றுண்டிச்சாலையொன்றை ஆரம்பிப்பதற்கும், மூதூரில் முன்கூட்டிய ஆசனப்பதிவு செய்யும் நிலையமொன்றினை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு தொடருந்து திணைக்கள முகாமையாளர் பண்டாரவிடம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 28 நிமிடங்கள் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
