குடத்தனை வடக்கிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி
யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கிலும் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
முதல் நிகழ்வாக பொது ஈகைச்சுடரினை இரண்டு மாவீரர்களின் தாயாரான திருமதி ஏற்றி வைத்தார்.
கொட்டும் மழையில் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரால் நனைகிறது கனகபுரம்! ஏற்றப்பட்டது பொதுச் சுடர் - LIVE
மலரஞ்சலி
அதனை தொடர்ந்து மாவீரர்களது திருவுருவ படங்களுக்கு பெற்றோர்கள் உறவினர்கள் சுடரேற்றி மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டன.

இந்தநிகழ்வில், குடத்தனை வடக்கு, குடத்தனை கிழக்கு, பொற்பதி அம்பன் உட்பட்ட பல்வேறு கிராமங்களிலிருந்தும் வருகைதந்து மக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இலங்கை தமிழரசு கட்சியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் முன்னெடுப்பில், தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், உள்ளூர் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து, நெல்லியடி நகரில் அமைந்துள்ள மாவீரர் நினைவேந்தல் மையத்தில் மாவீரர்களுக்கான இறுதி நாள் நினைவு தினம் இன்று (கார்த்திகை 27) மாலை 6.05 மணியளவில் மரியாதையுடன் அனுஷ்டிக்கப்பட்டது.
AMZOKH
மன்னார் மாவட்டம் மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம் பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் இன்றைய தினம் பிற்பகல் 6:5 மணியளவில் மணியோசை இசைக்கப்பட்டு பிற்பகல் 6:6ற்கு பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி வீதியில் #கம்பர்மலை சந்தியில் அமைந்துள்ள முதலாவது மாவீரர் சங்கரின் (சத்தியநாதன் சிலையடி) நினைவிடத்தில் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் இன்று மாவீரர் தினம் பேரெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.




பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri