கடும் வெள்ளத்திற்கு மத்தியிலும் மாவடிமுன்மாரியில் மாவீரர்களுக்கு செலுத்தப்பட்ட மரியாதை
மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் உணர்வு பூர்வமான அஞ்சலி நிகழ்வு நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் தற்போது நிலவி வருகின்ற வெள்ள அனர்த்த நிலமைக்கு மத்தியில் மாவீரர்களின் உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது, அதிகளவான மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
ஆயிரக்கணக்கான மக்கள்
இதில், இரண்டாயித்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்திலும் தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் மாவீரர் அனுஷ்டிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - பவன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 18 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி, தக் லைஃப் படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam

இந்ர ராசியினர் அவர்களே நினைத்தாலும் பிரபலமாவதை தடுக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவின் கட்டுப்பாடுகள்., ரூ.5,000 கோடி மதிப்பில் Rare Earth Magnet உற்பத்தி திட்டத்தில் இந்தியா News Lankasri
