நல்லூர் தொகுதிக் கிளையில் சம்பந்தனுக்கு அஞ்சலி
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த பெருந்தலைவர் இரா. சம்பந்தனுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நல்லூர் தொகுதிக் கிளையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு நல்லூர் தொகுதி கிளையின் தலைவரும் வடக்கு மாகாண சபை அவைத் தலைவருமான சீ. வீ. கே. சிவஞானம் தலைமையில் நேற்று(05) மாலை நடைபெற்றுள்ளது.
நினைவுச்சுடர்
நல்லூர் தொகுதி கிளை பணிமனையில் நடந்த இந்நிகழ்வில் நினைவுச்சுடரை நல்லூர் தொகுதி கிளையின் செயலாளர் இ. இராஜதேவன் ஏற்றி வைத்தார். இரா. சம்பந்தனின் திருவுருவ படத்துக்கு சீ. வீ. கே. சிவஞானம், இராஜதேவன் இணைந்து மலர் மாலை அணிவித்தனர்.
தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்றவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.இந்த நிகழ்வில் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் பங்கேற்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |









6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
