தமிழினப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளில் நந்திக்கடலில் அஞ்சலி (Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த காலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொன்றொழிக்கப்பட்ட நந்திக்கடல் பகுதியில் சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் பொதுச்சுடர் ஏற்றி மலர் தூவி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாகக் கொன்று அழிக்கப்பட்டதன் நினைவாகத் தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரம் வருடம் தோறும் மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

குறித்த காலப்பகுதியில் தமிழ் இனப்படுகொலை நடைபெற்ற பல்வேறு பகுதிகளிலும் தமிழினப் படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தில் ஆரம்ப நாள் நிகழ்வுகள் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்றிருந்தது.

இதேவேளை இன்றைய தினம் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்று அழிக்கப்பட்ட போது உணவின்றி தவித்த வேளையில் அவர்களுக்கு உயிர்காத்த உணவாகிய கஞ்சி வழங்குகின்ற நிகழ்வுகளும் முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கு,கிழக்கின் பல்வேறு மாவட்டங்களிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam