கிண்ணியா படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாடசாலையில் அஞ்சலி (Photos)
கிண்ணியா - குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்காக முல்லைத்தீவு கூழாமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அஞ்சலி நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா - குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் நேற்று நான்கு மாணவர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்திருந்தனர்.
படகு விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இன்று காலை முல்லைத்தீவு கூழாமுறிப்பு அ.த.க. பாடசாலை மாணவர்கள் சுடரேற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.
குறித்த அஞ்சலி நிகழ்வில் மாணவர்கள், அதிபர், ஆசியர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |