ஏழு முக்கிய குற்றங்களுக்கான விசாரணைகள் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

Vijitha Herath Sri Lanka Government Of Sri Lanka
By Sivaa Mayuri Oct 15, 2024 11:30 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report
Courtesy: Sivaa Mayuri

ஏழு முக்கிய குற்ற வழக்குகளைத் தவிர, கடந்த கால குற்றங்கள் அனைத்தையும் விசாரித்து, அதற்குக் காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் இன்று உறுதியளித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத், கடந்த கால குற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் புதிதாக விசாரணைகளை ஆரம்பிக்காது என தெரிவித்துள்ளார்.

ஏழு முக்கிய குற்ற வழக்குகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சு, பதில் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கிய அறிவுறுத்தலின் விளக்கமாக அமைச்சரின் கருத்து வெளியாகியுள்ளது.

எரிபொருளின் விலை குறித்து அமைச்சர் விஜித விடுத்துள்ள அறிவிப்பு

எரிபொருளின் விலை குறித்து அமைச்சர் விஜித விடுத்துள்ள அறிவிப்பு

விசாரணை 

மத்திய வங்கி பிணைமுறி மோசடி, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல், கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.பி. சிவராம், லலித் குமார் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனது, கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் காணாமல் போனது, வர்த்தகர் தினேஸ் சாஃப்டர் கொலை, வெலிகம று15 ஹோட்டலுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு சம்பவம் போன்ற சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.

ஏழு முக்கிய குற்றங்களுக்கான விசாரணைகள் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு | Trials For Seven Main Offences

அல்லது விசாரணை முடிவடைய குறைந்தபட்ச விடயங்களே தேவைப்படுவதாக அமைச்சர் ஹேரத் கூறியுள்ளார்.

எனவே, அந்த விசாரணைகளை விரைவுப்படுத்தும் உத்தரவுகளே தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உத்தரவு இந்த ஏழு வழக்குகளுக்கு மட்டும் அர்த்தமல்ல என்று கூறிய அமைச்சரவைப் பேச்சாளர், கடந்த காலங்களில் பதிவாகிய பொருளாதாரக் குற்றங்கள், கொலைகள், ஊடகவியலாளர்கள் காணாமல் போன சம்பவங்கள் போன்ற அனைத்து சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன், ஊடகவியலாளர்; லசந்த விக்கிரமதுங்க ஆகியோரின் மரணம், கேலிச்சித்திர செய்தியாளர் பிரதீப் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எக்னெலிகொட வழக்கு தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன எனக் கூறியுள்ளார்.

ஏழு முக்கிய குற்றங்களுக்கான விசாரணைகள் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு | Trials For Seven Main Offences

அத்துடன், நீதிமன்றில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. எனவே, நாங்கள் புதிய விசாரணையைத் தொடங்க வேண்டிய அவசியமில்லை. தேவைப்பட்டால், அதனையும் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முறையான முறையான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகள் முடிவடைந்ததையடுத்து, விசாரணைகள் தொடர்பான முழுமையான அறிக்கையை அரசாங்கம் பொதுமக்களுக்கு வெளியிடும் என்றும், அதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராகத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் அறிவித்துள்ளார். 

இலங்கை அரசாங்கத்திடம் சந்தோஸ் ஜா முன்வைத்துள்ள கோரிக்கை

இலங்கை அரசாங்கத்திடம் சந்தோஸ் ஜா முன்வைத்துள்ள கோரிக்கை

கிழக்கு ஆளுநரது பிரத்தியேக நியமனங்கள் குறித்த இம்ரான் மஹரூப் கவலை

கிழக்கு ஆளுநரது பிரத்தியேக நியமனங்கள் குறித்த இம்ரான் மஹரூப் கவலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US