ஏழு முக்கிய குற்றங்களுக்கான விசாரணைகள் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

Vijitha Herath Sri Lanka Government Of Sri Lanka
By Sivaa Mayuri Oct 15, 2024 11:30 PM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

ஏழு முக்கிய குற்ற வழக்குகளைத் தவிர, கடந்த கால குற்றங்கள் அனைத்தையும் விசாரித்து, அதற்குக் காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் இன்று உறுதியளித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத், கடந்த கால குற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் புதிதாக விசாரணைகளை ஆரம்பிக்காது என தெரிவித்துள்ளார்.

ஏழு முக்கிய குற்ற வழக்குகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சு, பதில் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கிய அறிவுறுத்தலின் விளக்கமாக அமைச்சரின் கருத்து வெளியாகியுள்ளது.

எரிபொருளின் விலை குறித்து அமைச்சர் விஜித விடுத்துள்ள அறிவிப்பு

எரிபொருளின் விலை குறித்து அமைச்சர் விஜித விடுத்துள்ள அறிவிப்பு

விசாரணை 

மத்திய வங்கி பிணைமுறி மோசடி, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல், கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.பி. சிவராம், லலித் குமார் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனது, கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் காணாமல் போனது, வர்த்தகர் தினேஸ் சாஃப்டர் கொலை, வெலிகம று15 ஹோட்டலுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு சம்பவம் போன்ற சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.

ஏழு முக்கிய குற்றங்களுக்கான விசாரணைகள் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு | Trials For Seven Main Offences

அல்லது விசாரணை முடிவடைய குறைந்தபட்ச விடயங்களே தேவைப்படுவதாக அமைச்சர் ஹேரத் கூறியுள்ளார்.

எனவே, அந்த விசாரணைகளை விரைவுப்படுத்தும் உத்தரவுகளே தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உத்தரவு இந்த ஏழு வழக்குகளுக்கு மட்டும் அர்த்தமல்ல என்று கூறிய அமைச்சரவைப் பேச்சாளர், கடந்த காலங்களில் பதிவாகிய பொருளாதாரக் குற்றங்கள், கொலைகள், ஊடகவியலாளர்கள் காணாமல் போன சம்பவங்கள் போன்ற அனைத்து சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன், ஊடகவியலாளர்; லசந்த விக்கிரமதுங்க ஆகியோரின் மரணம், கேலிச்சித்திர செய்தியாளர் பிரதீப் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எக்னெலிகொட வழக்கு தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன எனக் கூறியுள்ளார்.

ஏழு முக்கிய குற்றங்களுக்கான விசாரணைகள் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு | Trials For Seven Main Offences

அத்துடன், நீதிமன்றில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. எனவே, நாங்கள் புதிய விசாரணையைத் தொடங்க வேண்டிய அவசியமில்லை. தேவைப்பட்டால், அதனையும் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முறையான முறையான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகள் முடிவடைந்ததையடுத்து, விசாரணைகள் தொடர்பான முழுமையான அறிக்கையை அரசாங்கம் பொதுமக்களுக்கு வெளியிடும் என்றும், அதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராகத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் அறிவித்துள்ளார். 

இலங்கை அரசாங்கத்திடம் சந்தோஸ் ஜா முன்வைத்துள்ள கோரிக்கை

இலங்கை அரசாங்கத்திடம் சந்தோஸ் ஜா முன்வைத்துள்ள கோரிக்கை

கிழக்கு ஆளுநரது பிரத்தியேக நியமனங்கள் குறித்த இம்ரான் மஹரூப் கவலை

கிழக்கு ஆளுநரது பிரத்தியேக நியமனங்கள் குறித்த இம்ரான் மஹரூப் கவலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US