திறைசேரிக் கையிருப்பு ஒரு டிரில்லியன் இல்லை! அம்பலமாகியுள்ள அரசின் மற்றுமொரு பொய்
திறைசேரியில் ஒரு டிரில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி குவிந்து கிடப்பதாக அரசாங்கம் மேற்கொண்டு வரும் பிரச்சாரம் ஒரு அப்பட்டமான பொய் என்பது திறைசேரி அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.
நிதி அமைச்சின் திறைசேரி செயல்பாடுகள் குறித்து வெளியிடப்பட்ட சமீபத்திய நிதி அறிக்கைகளின்படி, 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2025 ஆம் ஆண்டின் இறுதியில் திறைசேரியின் இறுதிப் பண இருப்பு (Closing Cash balance) 110.72 பில்லியன் ரூபா மட்டுமே அதிகரித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
திறைசேரிக் கையிருப்பு
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, ரணிலிடம் இருந்து அநுரகுமாரவுக்கு அதிகாரம் கையளிக்கப்பட்ட 2024ம் ஆண்டின் டிசம்பர் 31, நிலவரப்படி திறைசேரியின் இறுதிப் பண இருப்பு 805.11 பில்லியன் ரூபாவாக இருந்துள்ளது.

2025 ஆம் ஆண்டின் பொது நிதி முகாமைத்துவத்தின்படி, டிசம்பர் 31, 2025 நிலவரப்படி திறைசேரியின் உண்மையான இறுதிப் பண இருப்பு 915.83 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
இது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது வெறுமமேன 110.72 பில்லியன் ரூபா மட்டுமே அதிகரித்துள்ளமை தெளிவாகின்றது.
பொது நிதி அறிக்கைகளின்படி, கடந்த சில ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் திறைசேரியில் உள்ள பண இருப்புகள் பின்வருமாறு,
திறைசேரித் தரவுகளின் பகுப்பாய்வு
டிசம்பர் 31, 2023 நிலவரப்படி (உண்மையான இருப்பு): 599.52 பில்லியன் ரூபா
டிசம்பர் 31, 2024 நிலவரப்படி (உண்மையான இருப்பு): 805.11 பில்லியன் ரூபா
டிசம்பர் 31, 2025 நிலவரப்படி (உண்மையான இருப்பு): 915.83 பில்லியன் ரூபா
2023 ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்தின் இறுதிப் பண இருப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக திறைசேரித் தரவுகளின் பகுப்பாய்வு காட்டுகிறது.

2023 ஆம் ஆண்டில் 599.52 பில்லியன் ரூபாவாக இருந்த கையிருப்பு, 2024 ஆம் ஆண்டில் 805.11 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
மேலும், 2025 ஆம் ஆண்டின் இறுதியில், அது வெறுமனே 110.72 பில்லியன் ரூபா அதிகரித்து 915.83 பில்லியன் ரூபாவாக நிலைபெற்றுள்ளது.
அந்த வகையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தபிறகு ஒரு டிரில்லியன் ரூபா நிதி திறைசேரியில் திரட்டி வைத்துள்ளதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் பொய்யானது என்பது அம்பலமாகியுள்ளதாக குறிப்பிடப்ட்டுள்ளது.