இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு பயணங்கள் மேற்கொள்ள தடை
இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு பயணங்கள் மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது.
நீண்ட கால வீசா அனுமதியுடையவர்கள் மற்றும் குறுகிய கால அனுமதியுடையவர்கள் உள்ளிட்ட இலங்கை, பங்களாதேஷ், நேபால் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் கல்வி அமைச்சர் லோரன்ஸ் வொங் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை இரவு 11.59 முதல் இந்த உத்தரவு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட நாடுகளிலிருந்து ட்ரான்ஸிஸ்ட் அடிப்படையிலும் சிங்கப்பூரிற்குள் பிரவேசிப்பதற்கு; இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் அதனை அண்டிய நாடுகளில் கோவிட் நிலைமை மிக மோசமாக காணப்படுகின்றது எனவும் இதனை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
சிந்தாமணியிடம் சிக்கப்போகும் சத்யா, க்ரிஷ் விஷயத்தில் அண்ணாமலை முடிவு... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam