கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸின் பிடியிலிருந்து தப்பிச் சென்றவருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை
அண்மையில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிச் சென்ற நிலையில் தேடப்படும் குற்றவாளிக்குழு உறுப்பினர் ரவிந்து சங்க என்றழைக்கப்படும் 'போரு மூனா'வின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு அவிசாவளை மேல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேல் மாகாண தெற்கு பொலிஸ் பிரிவினால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு இந்த பயணத்தடை நேற்றைய தினம் (15.03.2023) விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் 18ஆம் திகதி ஹன்வெல்லவில் உணவக உரிமையாளரை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 'போரு மூனா', பெப்ரவரி 24ஆம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி டுபாய்க்கு விமானத்தில் ஏற முற்பட்டுள்ளார்.
பொலிஸாரிடமிருந்து தப்பியோட்டம்

இதன்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும், அவர் இரண்டு பௌத்த பிக்குகளின் உதவியுடன் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்தநிலையில் ஹன்வெல்ல உணவக உரிமையாளரின் கொலைக்கு பின், பண்டாரகம, மில்லனிய, மல்வத்த வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தஞ்சமடைந்ததாக, விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட போது, போரு மூனா வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனை அடிப்படையாக கொண்டு, அவருக்கு உதவியமைக்காக இலங்கை கடற்படை உறுப்பினர்
ஒருவரும், அவரது மனைவியும் ஏனைய நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam