11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த TikTok பின்னணி - பெற்றோர்கள் கவனத்திற்கு!
தலங்கம பிரதேசத்தில் வாய் பேச முடியாத பெற்றோருக்குப் பிறந்த 11 வயது சிறுமியை ஏமாற்றி விருந்துக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் டிக்டோக் கிரி சமன் என்பவர் உட்பட நான்கு இளைஞர்கள் மற்றும் இரண்டு இளம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமி முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி தெஹிவளையில் இடம்பெற்ற விருந்தொன்றில் கலந்துகொள்வதற்காக சிறுமி வீட்டை விட்டுச் சென்றிருந்த நிலையில், மறுநாள் அவர் வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்றைய தினம் பல மணித்தியாலங்களின் பின்னர் சிறுமி வீடு திரும்பியிருந்த போதிலும் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் முல்லேரியா வைத்தியசாலைக்கு சிறுமி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதன் போது குறித்த சிறுமி ஆபத்தான போதைப்பொருள் உட்கொண்டதை சட்ட வைத்திய அதிகாரி சன்ன பெரேரா உறுதிப்படுத்தியுள்ளார்.அதனை தொடர்ந்து பொலிஸாரால் இந்த செயல்கள் தொடர்பான தகவல்களைக் கண்டறிய முடிந்துள்ளது.
2021 ஆம் ஆண்டின் இறுதியில், இந்த சிறுமி வாட்ஸ்அப் மூலம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். பின்னர் அவர் மட்டக்குளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரையும் ராஜகிரியவைச் சேர்ந்த டிக்டோக் கிரி சமன் என்பவரையும் அடையாளம் கண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
டிக்டோக் கிரி சமன் என்பவரால் சிறுமி விருந்திற்கு வருமாறு அழைப்பு விடுத்ததற்கமைய சிறுமியின் பெற்றோர் மற்றும் சகோதரனுக்கு தெரியாமல் டிசம்பர் மாதத்தின் ஒருநாள் நள்ளிரவு 12 மணிக்கு வீட்டில் இருந்து விருந்திற்கு சென்று அதிகாலை 4 மணியளவில் அவர் வீட்டிற்கு வந்துள்ளார் என சிறுமியின் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சிறுமியை டிக் டோக் கிரி சமன் என்பவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவருடன் இருந்த மற்றொரு நபர் சிறுமியுடன் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக சிறுமி குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, டிசம்பர் 20, 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பேலியகொடையில் விருந்து ஒன்றிற்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சிறுமி வீட்டை விட்டு வெளியேறி மறுநாள் காலை 6.30 மணியளவில் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அங்கு டிக்டாக் கிரி சமன் மற்றும் மற்றொரு நபர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விருந்தில் களனியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை அடையாளம் கண்ட சிறுமி, ஜனவரி முதலாம் திகதி தெஹிவளையில் இடம்பெற்ற விருந்தொன்றில் அவரது அழைப்பின் பேரில் கலந்து கொண்டுள்ளார். அடுத்த நாள் பிற்பகல் வரை தனது மகள் வீட்டிற்கு வராத நிலையில் பெற்றோர் தலங்கம பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
எனினும் பிற்பகல் சிறுமி வீட்டிற்கு வருகைத்தந்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். ஒரு சிறிய களிமண் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக சிறுமி கூறினார், ஆனால் அந்த இடம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என ஒரு பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.
ஒவ்வொரு முறை விருந்துக்கு அழைத்துச் செல்லப்படும்போதும் சிறுமிக்கு பல்வேறு போதைப்பொருட்கள் வழங்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 19 மற்றும் 22 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், இவர்கள் ராஜகிரிய, மட்டக்குளி மற்றும் களனி ஆகிய பகுதிகளை வசிப்பவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கஞ்சியும் செல்ஃபியும் 5 மணி நேரம் முன்

பிறக்கும் போது லட்சுமியின் வரத்தினை பெற்ற 4 ராசி - பணத்திற்கு பஞ்சமே இருக்காது...அதிர்ஷ்டம் தேடி ஓடி வரும்! Manithan

சிம்புவின் தந்தை நடிகர் டி. ராஜேந்தர் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அபாய கட்டத்தில் உள்ளாரா? Manithan

வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய நபர் 2 சிறுநீரகங்களும் செயலிழந்து உயிரிழப்பு... வெளிவந்த பதறவைக்கும் உண்மை News Lankasri

55 வயதில் கனடா சாக்லேட் நிறுவனத்தில் வேலை! மகிழ்ச்சியில் துள்ளிய நபருக்கு தெரியவந்த உண்மை... எச்சரிக்கை செய்தி News Lankasri

கடுமையான உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டி. ராஜேந்தர்.. அதிர்ச்சியளிக்கும் செய்தி Cineulagam

பிச்சை எடுத்து கட்டுகட்டாக பணம் சேர்ந்த நபர்! மனைவிக்கு கொடுத்த ஒரு ஆச்சரிய பரிசு... நெகிழ்ச்சி வீடியோ News Lankasri

கடுப்பான பிரியங்கா... தாமரைக்கு பணம் கொடுத்த பிக் பாஸ் பெண் போட்டியாளர்! மேடையில் அவிழ்ந்த உண்மை Manithan
நன்றி நவிலல்
திரு மாணிக்கம் இரவீந்திரகுமார்
அளவெட்டி, ஜேர்மனி, Germany, சுவிஸ், Switzerland, London, United Kingdom, போரூர், India, Toronto, Canada
24 Apr, 2022
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022