நாடாளுமன்ற வீதியை முடக்கியுள்ள போக்குவரத்துச் சபை பேருந்துகளின் வரிசை
பத்தரமுல்லையில் அமைந்துள்ள நாடாளுமன்ற வீதி இலங்கைப் போக்குவரத்துச் சபை பேருந்துகளின் வரிசை காரணமாக முடங்கும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற வீதியில் இன்று (09.01.2024) காலை முதல் நீண்டவரிசையில் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் தரித்து நிற்கத் தொடங்கியுள்ளன.
பழுதுபார்க்கப்பட்ட பேருந்துகள்
இந்நிலையில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், பதுளை, ஏறூர், அம்பாறை போன்ற தொலைதூர பிரதேசங்களில் இருந்தும் கொழும்புக்கு அருகிலுள்ள பேருந்து டிப்போக்களிலிருந்தும் குறித்த பேருந்துகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த டிப்போக்களில் இருந்து பழுதுபார்க்கப்பட்ட பேருந்துகளே போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பார்வையிடுவதற்காக இவ்வாறு கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 14 மணி நேரம் முன்
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan