மீண்டும் வழமைக்கு திரும்பும் மலையக தொடருந்து சேவைகள்
நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த மலையக தொடருந்து சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக தொடருந்து பாதையில் மண்மேடு மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தமையினால் மலையக தொடருந்து சேவையானது நேற்று (23.11.2023) நானுஓயா வரை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டது.
தொடருந்து சேவை
இந்த நிலையில், பதுளை தொடருந்து நிலையத்தில் ஆரம்பமாகும் அனைத்து தொடருந்துகளும் நானுஓயா தொடருந்து நிலையத்தில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், தொடருந்து பாதையில் சரிந்த மண்மேடு மற்றும் பாறைகளை அகற்றும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதால் மலையகத்துக்கான தொடருந்து சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri