ஊடகவியலாளர்களுக்கு நடைபெற்ற பயிற்சி மாநாடு
கண்டியில் உள்ள தவுலகலவில் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி மாநாடு இன்று (15.07.2014) நடைபெற்றுள்ளது.கண்டி மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் பல் ஊடக ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஆரோக்கியமான சமூக மாற்றத்தினை ஏற்படுத்துவதில் ஊடகவியலாளர்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர்.
உண்மைக்கு உண்மையாக மனித நேயத்தை நேசித்து ஊடகப் பங்களிப்பு செய்வர்களினால் தான் சிறந்த சமூக மாற்றத்தையும் சுபீட்சமான நாட்டையும் கட்டியெழுப்ப முடியும் என்று சம் சம் பவுண்டேசன் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யூசுப் முப்தி தெரிவித்தார்.
சமூக மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள்
சம் சம் பவுண்டேசன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்களுக்கான மாநாடு கண்டி தவுலகலவில் அமைந்துள்ள சம் சம் பவுண்டேசன் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
சம் பவுண்டேசன் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யூசுப் முப்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
இதில் அச்சு, இலத்தினிரனியல் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள், சமூக டிஜிட்டல் இளம் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது சம் சம் நிறுவனம் நாடளாவிய ரீதியில் நாட்டின் பல்லின மக்களின் மேம்பாட்டுக்காக ஆற்றி வருகின்ற தொண்டுப் பணிகள் தொடர்பான விடயங்களும் வளவாளர்களினால் தெளிவுபடுத்தப்பட்டன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |