திருகோணமலையில் இடம்பெற்ற அபிவிருத்தி தேசிய வாரம்
முன்பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தேசிய வாரத்தினை முன்னிட்டு வீதிப் போக்குவரத்து பாதுகாப்பு பற்றிய அடிப்படை எண்ணக்கருக்கள் பற்றி முன்பள்ளி பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்து வைத்தல் நிகழ்வொன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது இன்று (15) திருகோணமலையில் அமைந்துள்ள உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்றது.
பலர் பங்கேற்பு
கிழக்கு மாகாண சபை மற்றும் மாகாண முன்பள்ளி கல்விப் பணியகம் மற்றும் யுனிசெப் நிறுவனமும் இணைந்து இந்நிகழ்வினை மேற்கொண்டுள்ளன.
இந்நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக சிறுவர்களின் வரவேற்பு நடனம், வீதிப்போக்குவரத்து தொடர்பாக பாடல்களுடன் கூடிய நிகழ்வுகளும் மேடையை அலங்கரித்தன.
இதன்போது முன்பள்ளி பிள்ளைகளிடம் சாலைப் பாதுகாப்பு குறித்த மனப்பான்மையை வளர்ப்பது, பிள்ளையின் ஆரம்ப வளர்ச்சியில் சாலை பாதுகாப்பு பற்றிய அறிவையும் விழிப்புணர்வையும் பகிர்ந்து கொள்ளல், ஆரம்பகால பிள்ளைப் பருவ பராமரிப்பு மற்றும் மேம்பாடு தொடர்பான தரமான சேவைகளைப் பெறல், இலங்கையில் ஆரம்பகால பிள்ளைப் பருவ பராமரிப்பு மற்றும் மேம்பாடு பற்றி அனைத்து பொறுப்புள்ள பங்குதாரர்களிடையே பொதுவான புரிதலை உறுதி செய்தல் போன்ற விடயங்கள் தெளிவூட்டப்பட்டது.