சாணக்கியனின் முக்கிய கோரிக்கையினை நிறைவேற்றியது அரசாங்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனினால் முன்வைக்கப்பட்டிருந்த முக்கிய கோரிக்கை ஒன்றினை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.
பொலன்னறுவை முதல் கொழும்பு வரையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் கடுகதி புகையிரத சேவையினை மட்டக்களப்பிலிருந்து ஆரம்பிக்குமாறு 2021.04.29ம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்திருந்தார்.
“முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் பொலன்னறுவை முதல் கொழும்பு வரையிலான கடுகதி புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த புகையிரத சேவையானது பொலன்னறுவையிலிருந்து அதிகாலை 3 மணிக்கு மணிக்கு புறப்பட்டு காலை 9 மணிக்கு கொழும்பினை வந்தடைகின்றது.
அதேபோன்று கொழும்பிலிருந்து மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு 7.15 மணிக்கு பொலநறுவையினை சென்றடைகின்றது.
இந்தநிலையில் அதிகாலை 3 மணிக்கு பொலன்னறுவையில் இருந்து குறித்த புகையிரத சேவை ஆரம்பிக்கப்படுவதற்கு சற்று முன்னராக மட்டக்களப்பில் இருந்து ஆரம்பிக்க முடியுமா என்பதனை ஆராய்ந்து பாருங்கள்.
அதிகமான நேரங்களில் காலியான இருக்கைகளுடன்னேயே புகையிரத கொழும்பினை சென்றடைகின்றது. பொலன்னறுவையில் இருந்து சேவையினை ஆரம்பிக்கின்றமை காரணமாகவே குறைந்தளவானர்கள் பயணிக்கின்றனர்.
எனவே பொலன்னறுவைக்கான ஆசனங்களை ஒதுக்கீடு செய்ததன் பின்னராக, பொலன்னறுவையில் இருந்து குறித்த புகையிரத சேவை ஆரம்பிக்கப்படுவதற்கு சற்று முன்னராக மட்டக்களப்பில் இருந்து ஆரம்பிக்க முடியுமா? ஏனெனில் தற்போது மட்க்களப்பிலிருந்து கொழும்பிற்கு வரும் புகையிரத பயணிப்போர் இரண்டு நாட்களாவது கொழும்பில் தங்கியிருந்து தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது.
எனினும் காலை 9 மணிக்கு கொழும்பிற்கு வருகை தந்தால், தங்களது கடமைகளை பூர்த்தி செய்துகொண்டதன் பின்னர் மீண்டும் அன்றைய தினம் மாலையே மட்டக்களப்பிற்கு திரும்பி செல்ல முடியும்.
நான் பொலன்னறுவை கொழும்பிற்கான புகையிரத சேவைக்கான நேரத்தினை மாற்றுமாறு கூறவில்லை அந்த நேரத்திற்கு முன்னராக மட்டக்களப்பிலிருந்து ஆரம்பிக்க முடியுமா என்றே கேட்கின்றேன்.“ எனக் அன்றைய தினம் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த போக்குவரத்து அமைச்சர், அதிகாரிகளுடன் பேசிவிட்டு உரிய பதிலினை வழங்குவதாக தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து கருத்து வெளியிட்ட இரா.சாணக்கியன் அதிகாரிகள் இதனை செய்வதற்கு தயாராக இருக்கின்றனர். எனவே வெள்ளோட்ட முறையில் இதனை செய்து பார்க்க முடியுமா? எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.
சேவையினால் மக்கள் நன்மையடைவார்கள். இவ் சேவையானது மிக விரைவில் எம் மக்களுக்கு கிடைக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்தநிலையில் நேற்று (செவ்வாய்கிழமை) வெளியிடப்பட்ட போக்குவரத்து அமைச்சின் அறிவிப்பிற்கு அமைய, பொலநறுவை - கொழும்பு கோட்டைக்கு இடையில் இடம்பெறும் "புலதுசி " அதிவேக குளிரூட்டப்பட்ட புகையிரத சேவை 28-01-2022 திகதி முதல் மட்டக்களப்பு - கொழும்பு சேவையாக விஸ்தரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகையிரத சேவையானது மட்டக்களப்பிலிருந்து அதிகாலை 01.30 மணிக்கு புறப்பட்டு காலை 08.45 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும். மீண்டும் பிற்பகல் 15.05 கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் புகையிரதமானது இரவு 21.52க்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தனது கோரிக்கை தொடர்பில் விரைந்து மக்கள் நலன்சார்ந்து செயற்பட்ட
அமைச்சருக்கு இரா.சாணக்கியன் நன்றி தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கஞ்சியும் செல்ஃபியும் 4 மணி நேரம் முன்

கடுப்பான பிரியங்கா... தாமரைக்கு பணம் கொடுத்த பிக் பாஸ் பெண் போட்டியாளர்! மேடையில் அவிழ்ந்த உண்மை Manithan

முதல்ல சிம்பு வேணும்... அப்பறம் தண்ணீர் வேணும்! எங்களை சேர்த்து வைங்க ப்ளீஸ்... சிம்பு வீட்டு முன்பு பிரபல நடிகை தர்ணா Manithan

வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய நபர் 2 சிறுநீரகங்களும் செயலிழந்து உயிரிழப்பு... வெளிவந்த பதறவைக்கும் உண்மை News Lankasri

தளபதி விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகும் இரண்டு அப்டேட்ஸ் ! இப்போதே கொண்டாட ஆரம்பித்த ரசிகர்கள்.. Cineulagam

உக்ரைன் அழகிக்காக மனைவியை கைவிட்ட பிரித்தானியர் விவகாரம்: அந்த இளம்பெண் என்ன கூறியிருக்கிறார் பாருங்கள் News Lankasri

சிம்புவின் தந்தை நடிகர் டி. ராஜேந்தர் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அபாய கட்டத்தில் உள்ளாரா? Manithan

பிச்சை எடுத்து கட்டுகட்டாக பணம் சேர்ந்த நபர்! மனைவிக்கு கொடுத்த ஒரு ஆச்சரிய பரிசு... நெகிழ்ச்சி வீடியோ News Lankasri

பிறக்கும் போது லட்சுமியின் வரத்தினை பெற்ற 4 ராசி - பணத்திற்கு பஞ்சமே இருக்காது...அதிர்ஷ்டம் தேடி ஓடி வரும்! Manithan

55 வயதில் கனடா சாக்லேட் நிறுவனத்தில் வேலை! மகிழ்ச்சியில் துள்ளிய நபருக்கு தெரியவந்த உண்மை... எச்சரிக்கை செய்தி News Lankasri
நன்றி நவிலல்
திரு மாணிக்கம் இரவீந்திரகுமார்
அளவெட்டி, ஜேர்மனி, Germany, சுவிஸ், Switzerland, London, United Kingdom, போரூர், India, Toronto, Canada
24 Apr, 2022
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022