மூன்று மாதங்களின் பின்னர் மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்கும் இடையிலான நேரடி புகையிரத சேவை ஆரம்பம்
மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்கும் இடையிலான நேரடி புகையிரத சேவை இன்று காலை முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
இன்று காலை 6.10 மணிக்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து முதலாவது புகையிரதம் கொழும்பை நோக்கிப் புறப்பட்டுள்ளது.
அதேவேளை மாலை 3.15 மணிக்கு கொழும்பு புகையிரத நிலையத்தை சென்றடைந்துள்ளது.
இதேபோன்று கொழும்புக்கான இரவு நேர கடுகதி புகையிரத சேவை உட்பட அனைத்து சேவைகளும் இம்மாதம் 25ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளதாக புகையிரத நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக மூன்று மாதங்களுக்கும் மேலாக இடை நிறுத்தப்பட்டிருந்த குறித்த மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்கும் இடையிலான நேரடி புகையிரத சேவையானது இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டிடி வாழ்க்கையில் விதி விளையாடிவிட்டது, மிகப்பெரிய வலி... எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா ஓபன் டாக் Cineulagam