சகல சேவைகளில் இருந்தும் விலகும் பொறுப்பதிகாரிகள்:நாளை முதல் ரயில் பயணங்கள் தடைப்படலாம்
தொடரூந்து நிலைய பொறுப்பதிகாரிகள் இன்று நள்ளிரவு முதல் அனைத்து தொடரூந்து சேவைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர்.
தமது கோரிக்கையை நிறைவேற்ற தொடரூந்து திணைக்களம் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், தொழிற்சங்க நடவடிக்கை தீவிரப்படுத்த தீர்மானித்ததாக தொடரூந்து நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் சில தினங்களாக பயணிகளுக்கு சிரமங்கள் ஏற்படாத வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
எனினும் எமது கோரிக்கை தொடர்பில் தொடரூந்து திணைக்கள முகாமைத்துவம் நழுவி சென்றுக்கொண்டிருப்பதால், இன்று நள்ளிரவு முதல் பயணிகளுக்காக குறைந்த அளவிலேனும் தொடரூந்துகளை இயக்க தாம் தயாரில்லை என சங்கத்தின் தலைவர் சுமித் சோரத்ன (Sumith Somarathna) கூறியுள்ளார்.
இதன் காரணமாக சிரமங்களுக்கு உள்ளாகும் பயணிகள் குறித்து தாம் வருத்தமடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடரூந்து நிலைய பொறுப்பதிகாரிகள், தொடரூந்து பயணச்சீட்டு விற்பனை செய்வதில் இருந்து விலகி இருக்கும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக தொடரூந்து திணைக்களத்திற்கு நாள் ஒன்றில் 80 முதல் 90 லட்சம் ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 15 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri