கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் புகையிரத பயணங்கள் நிறுத்தம்
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து வெளியிடங்களுக்கு பயணங்களை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்த அனைத்து புகையிரத சேவைகளையும் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் இலங்கை புகையிரத திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரத திணைக்கள தொழிற்சங்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு கொழும்பில் இருந்து தமது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வரும் நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக கொழும்பிலிருந்து செல்லும் புகையிரத பயணிகள் அசௌகரியத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும் என சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.