வழமைக்கு திரும்பிய மலையக தொடருந்து சேவை
உடுவர பிரதேசத்தில் தொடருந்து பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக தடைப்பட்ட பதுளை - தெமோதரை இடையேயான தொடருந்து சேவை இன்று (2) காலை முதல் வழமை போல் இயங்குமென நாவலப்பிட்டி தொடருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டை - பதுளை வரையிலான தொடருந்து இன்று (2) முதல் வழமை போன்று இயங்கும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
எல்ல வரையிலான தொடருந்து சேவை
கடந்த சில தினங்களாக பதுளை பிரதேசத்தில் பெய்த அடை மழை காரணமாக கடந்த 25ஆம் திகதி காலை உடுல்லை தொடருந்து பாதையின் உடுவர கனுவ பகுதியில் உள்ள தொடருந்து பாதையில் பாரிய மண் மேடு சரிந்து விழுந்தது.
இதனால் கொழும்பு கோட்டையில் இருந்து நானுஓயா, பண்டாரவளை மற்றும் எல்ல வரையிலான தொடருந்து சேவை மட்டுப்படுத்தப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan
