இந்தியாவில் யாத்திரை சென்ற பக்தர்கள் 9 பேருக்கு நேர்ந்த பரிதாபம் : வெளியான அதிர்ச்சி தகவல்
இந்திய(India) மாநிலம் பீகாரில், காரில் பயணித்த கன்வார் யாத்திரை பக்தர்கள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கன்வார் யாத்திரையானது வட மாநிலங்களில் புகழ்பெற்ற ஒன்றாக காணப்படுகின்றது.
இரங்கல் தெரிவிப்பு
இந்நிலையில் பீகார் மாநிலம் சோனாப்பூரில் உள்ள பாபா ஹரிகர்நாத் கோவிலில், பக்தர்கள் சிலர் ஜல அபிஷேகத்திற்காக காரில் பயணித்தனர்.
இதன்போது அவர்கள் சென்ற வாகனம் சுல்தான்பூர் கிராமத்தில் வைத்து எதிர்பாராத விதமாக மின்சாரக் கம்பிகள் அறுந்து வீழ்ந்தன.
இதில் காரில் இருந்த 9 பேர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இருவர் படுகாயங்களுடன் தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட பொலிஸார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறித்த துயர சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

திருமணமாகி ஒரே வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்: தப்பித்தேன் என்கிறார் மணமகன் News Lankasri

பாகிஸ்தானுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்., இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாராகும் நவீன ஆயுதம் News Lankasri

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan
