எரிபொருள் வரிசையை தாண்டிய துயரம்! சொல்லப்படாத பல உண்மைகள்
இலங்கை நாடு என்றவுடன் நினைவில் வருவது வரிசையில் நிற்கும் மக்கள் தான்.
இங்கு பலர் உணவு சமைத்து சாப்பிட மண்ணெண்ணெய் தேவை என்றும் இன்னும் சிலர் தொழிலுக்கு செல்ல, வியாபாரம் மேற்கொள்ள எரிபொருள் தேவை என்றும் வரிசையில் நிற்கின்றனர். சிலர் எரிபொருள் வரிசையில் நிற்பதே இல்லை.
இந்த சூழ்நிலையிலும் இப்படி இருப்பார்களா? என யோசிக்க தோன்றும். ஆமாம் இப்படியும் சிலர் இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் பணம் படைத்தவர்கள் என எண்ணக்கூடாது.
உண்மை என்னவெனில் மண்ணெண்ணெய் வாங்கி கொண்டு வீட்டில் வைத்து சமைப்பதற்கு எந்த உணவு பொருளும் இல்லாமல் ஒரு வேளை உணவிற்காக நாட்கூலி வேலைக்கு செல்லும் பெண்களே அவர்கள்.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 300 ரூபா நாட்கூலிக்கு வேலை செய்யும் மூன்று பெண் சகோதரிகள் பற்றிய தேடலில் நாம் அறிந்தவை உங்களுக்காக,