புதிய களனி பாலத்தில் போக்குவரத்து மட்டுப்படுத்தல்: வெளியான அறிவிப்பு
புதிய களனி பாலத்தில் இருந்து துறைமுகத்திற்கு செல்லும் பாதை திருத்த வேலை காரணமாக மூடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை சுற்றுலா பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
அதன்படி, இன்று (09) இரவு 9:00 மணி முதல் பெப்ரவரி 12 ஆம் திகதி அதிகாலை 5:00 மணி வரை கட்டுநாயக்கவிலிருந்து களனி பாலம் மற்றும் துறைமுகத்தை நோக்கிச் செல்லும் பாதை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒருகொடவத்த சந்தியில் இருந்து களனி பாலத்திற்குள் பிரவேசித்து துறைமுக நுழைவாயில் (இங்குருகடே சந்தியை நோக்கிய) பாலத்தின் நடுப்பகுதியை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு பலகை
இதன் மூலம் அதிவேக வீதியின் கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கும், ஒருகொடவத்தையிலிருந்து கட்டுநாயக்கவிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தப்பணியின் போது, ஒருகொடவத்தை - வெல்லம்பிட்டிய வீதியில் தெமட்டகொட, பேலியகொட, நீர்கொழும்பு வீதி, மீன் சந்தைக்கு அருகில், கண்டி வீதி, தோரண சந்தி ஆகிய இடங்களில் அறிவிப்பு பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam