நுவரெலியாவில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
Sri Lanka Police
Nuwara Eliya
Weather
By Thiva
நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நேற்றிரவு மரம் ஒன்று முறிந்து விழுந்தமையால், குறித்த வீதியூடான போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டிருந்ததாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின்னர் குறித்த வீதியூடனான போக்குவரத்து சீராகியுள்ளது.
சீரற்ற காலநிலை
நுவரெலியா மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் நுவரெலியா பொலிஸாரின் உதவியுடன் ஒரு மணி நேரத்தில் மரத்தை முழுமையாக வெட்டி அகற்றியுள்ளனர்.
நுவரெலியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் காற்று காரணமாக, மரங்கள் விழுவது அதிகரித்துள்ளது.
இதனால் வாகனங்களை பழமையான மரங்களுக்கு அடியில் நிறுத்த வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தி உள்ளனர்.






திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 9 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US