கொழும்பில் கடுமையான போக்குவரத்து நெரிசல்: வெளியான காரணம்
கொழும்பில் உள்ள வீதிகளில் எழுபது சதவீத சமிக்ஞை அமைப்புகள் பழுதடைந்துள்ளதால், கொழும்பில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த வண்ண சமிக்ஞை அமைப்புகளில் சென்சார்கள் மற்றும் எண்கள் இல்லாததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களிலும், பாடசாலை மூடும் நேரங்களிலும் போக்குவரத்து சமிக்ஞைகளின்படி போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடுமையான நிலைமை
இருப்பினும்,கொழும்பில் உள்ள வீதிகளில் எழுபது சதவீத சமிக்ஞை அமைப்புகள் பழுதடைந்துள்ளதால் கடுமையான நிலைமையை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி, சர்வதேச தரத்திற்கு ஏற்ப வண்ண சமிக்ஞை அமைப்புகளை நவீனமயமாக்கவும், தானியங்கி எண்களை செயல்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு மாநகரப் பிரிவு, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கவனமும் இந்த விடயத்தில் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் புதிய திருப்பம்! சுரேஷ் சலே வழக்கில் நீதிமன்றத்தை நாடிய பௌத்த தேரர்
வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்: வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்
மத்திய கிழக்கில் ஆட்டத்தை ஆரம்பித்துள்ள அமெரிக்கா! ஹோர்முஸ் நீரிணையை 'சிவப்புக் கோடு' என்று அறிவித்த ஈரான்
மோசமான முத்துவேல் உடல்நிலை, குடும்பத்திடம் உண்மையை உடைத்த பாண்டியன்... பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam