இலங்கையில் 8ஆயிரம் கோடி ரூபா கடன் செலுத்த வேண்டிய உயர்மட்ட வர்த்தகர்கள் 10பேர்
இலங்கையின் உயர்மட்ட வர்த்தகர்கள் 10 பேர், நாட்டின் அரச வங்கிகளிடம் கோடிக்கணக்கில் கடன் பெற்று செலுத்த தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு பிரதான அரச வங்கிகளுக்கு சுமார் 8,000 கோடி ரூபா கடனை இந்த 10 வர்த்தகர்களும் செலுத்தத் தவறியுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

வெளியாகியுள்ள சா.தரப் பரீட்சை பெறுபேறுகள் : பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள மாணவி விதுர்ஷாவின் நெகிழ்ச்சி பதிவு
நாடாளுமன்றத்தின் பொறுப்பு
கொழும்பில் இடம்பெற்ற மாநாடொன்றின் போது அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.
இந்த 10 உயர்மட்ட அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிடுவது நாடாளுமன்றத்தின் பொறுப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட தொழிலதிபர்கள் இலங்கை வங்கிக்கு 5,000 கோடி ரூபாவையும் மக்கள் வங்கிக்கு 3,000 கோடி ரூபாவையும் வழங்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |