சிகிரியாவை சுற்றிப் பார்க்க வந்த பயணிக்கு நேர்ந்த கதி- தீவிரப்படுத்தப்படும் விசாரணை
சிகிரியா - பிதுரங்கல வீதியில் காட்டு யானை தாக்கியதில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(16.02.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த 68 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
மேற்படி, நபர் தனது மனைவியுடன் நேற்று(16) சிகிரியா மற்றும் பிதுரங்கல ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட வீதியில் நடைப் பயணத்தில் ஈடுபட்டிருந்த போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திடீரென வீதிக்கு வந்த காட்டு யானை அவர்களைத் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிகிரியா பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 4 நாட்கள் முன்
யாழில் ஆலயத்திற்குச் சென்ற 400 பேரின் கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு! மருத்துவ அறிக்கையில் வெளியான காரணம்
தந்தைக்கே பல இலட்சம் ரூபா வாடகை செலுத்திய ஷிரான் பாசிக்! முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரின் புகைப்படமும் கண்டுபிடிப்பு...