நாட்டிற்கு வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்
செப்டெம்பர் மாதத்தில் இதுவரை மொத்தம் 52,246 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகத்தின் (SLTDA) தரவுகள் தெரிவிக்கின்றன.
தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து மொத்தம் 14,300 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், இது 27.4வீதம் ஆகும்.
சமீபத்திய புள்ளிவிவரங்கள்
மேலும், செப்டெம்பர் மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,092 பேரும், ஜெர்மனியிலிருந்து 3,488 பேரும், சீனாவிலிருந்து 2,796 பேரும், அவுஸ்திரேலிய நாட்டினர் 2,603 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதற்கிடையில், செப்டெம்பர் மாதத்திற்கான சமீபத்திய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,618,769 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில், 339,895 பேர் இந்தியாவையும், 155,233 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 119,132 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என்று இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




