நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸ் போக்குவரத்து உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நாட்டில் நேற்று(28.09.2023) முதல் ஆரம்பமாகியுள்ள நீண்ட வார இறுதி விடுமுறையின் போது பல்வேறு பிரதேசங்களுக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் போக்குவரத்தில் விசேட கவனம் செலுத்துமாறு கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று(28.09.2023) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கை
மேலும், தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு இதனை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, பயணிகளின் பாதுகாப்பு கருதி பொலிஸ் போக்குவரத்து உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
